தஞ்சை அருகே பூச்சி மருந்து குடித்து அரசு ஊழியர் தற்கொலை முயற்சி : உயர் அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம்
May 26 2022 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை அருகே அரசு ஊழியர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயர் அதிகாரிகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே முன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக்கிடங்கில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளாங்காட்டை சேர்ந்த வீரையன் என்பவர், தர ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கிடங்கில் பணியில் இருந்தபோது வீரையன் பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை சக ஊழியர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று வீரையனிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில், நெல் மூட்டைகளை திருப்பி அனுப்பி உயர் அதிகாரிகள் தொடர்ந்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.