டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் நாளை மாலை தண்ணீர் திறப்பு
May 26 2022 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தஞ்சை கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
குறுவை சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை மாலை 5 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.