திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடை மதுபாட்டிலில் இறந்து கிடந்த தவளை : ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்

May 26 2022 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அருகே, அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் தவளை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தரேவு பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் குவாட்டர் பாட்டில் வாங்குவதற்காக சென்ற மதுப்பிரியர், அதனை வாங்கியதும் பாட்டிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலுக்குள் மதுவுடன் கலந்து குட்டித் தவளை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுபாட்டில் வாங்கினால் சைடிஸ் ஃப்ரீ என்பதைப்போல, மதுவுடன் இறந்த நிலையில் கிடந்த தவளை மது பாட்டில் வாங்க வந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களில் பூச்சி, பல்லி இறந்து கிடந்த நிலையில் தற்போது தவளை கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00