நாகை வேளாங்கண்ணியில் பட்டப்பகலில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி : கட்​டையால் தாக்‍கிய பழக்‍க​டை வியாபாரிகள்

May 26 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை பழ வியாபாரிகள் கட்டையால் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நடவண்டி மோகன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்திவரும் வியாபாரிகளிடம், மது குடிக்க கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழக்‍கடை வியாபாரி மதியழகன், அவரது மகன் ஆனந்த மாரிமுத்து ஆகியோர் நடவண்டி மோகனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நடவண்டி மோகன், திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பணம் கேட்டு மிரட்டியவரை பழக்‍கடை வியாபாரிகள் கட்டையால் தாக்‍கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00