மதுரை அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை : 500 தென்னை மரங்கள், 5,000 வாழை மரங்கள் முறிந்து சேதம்

May 26 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே இடி மின்னலுடன் பெய்த கனமழையால் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை பகுதியில் நேற்று இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஐந்தாயிரத்துக்‍கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் மாமரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் முதலீ​ட்டில் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்‍கப்பட்ட தங்களுக்‍கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00