மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2வது நாளாக வீணாகும் குடிநீர் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
May 26 2022 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டாவது நாளாக குடிநீர் வீணாகி வரும் நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நாள்தோறும் வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரானது பல்வேறு முறையில் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அருகே காவிரி கிராஸ் பகுதியில் மேற்குக்கரை கால்வாயில் இருந்து சாலையை கடந்து செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.