நெல்லையில் குடும்ப வறுமையால் மேல்படிப்பை தொடர முடியாத நிலை : பணம் இல்லாத வேதனையில் விஷமருந்தி கல்லூரி மாணவி தற்கொலை
May 26 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே, குடும்ப வறுமையால் மேல்படிப்பைத் தொடர பணம் இல்லாத வேதனையில், கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி பகுதியைச் சேர்ந்த திரு.ஆறுமுகம் என்பவரது மகள் இந்திராணி, நெல்லை அருகே பிரபல தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் பிரிவில் பயின்று வந்தார். கல்லூரி முடிந்து விஷமருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டின் அருகே வந்தபோது இந்திராணி மயங்கி விழுந்ததால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி படிப்பு முடிந்து இந்திராணி மேல்படிப்புக்கு படிக்க விரும்பியதாகவும், குடும்ப சூழல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.