மாட்டு வண்டியில் மணல் எடுக்கஅனுமதி கோரி அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் கரூரில் ஆர்ப்பாட்டம்
May 26 2022 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாட்டு வண்டியில் மணல் எடுக்கஅனுமதி கோரி, அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு, காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி மறுத்ததையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளித்தது போல் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.