தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக சுட்டெரித்து வந்த கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது - சென்னையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

May 28 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை காலத்தின் உச்சமான அக்‍னி நட்சத்திரம் இன்று நிறைவடைகிறது.

இம்மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், 25 நாட்கள் நீடித்த நிலையில், சென்னை, ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெயில் முறை சதம் அடித்தது. எனினும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. கடந்த 6-ம் தேதி வேலூரில் அதிகபட்சமாக 105 புள்ளி ஒன்பது எட்டு ஃபாரன்ஹூட் பதிவானது. எனினும், அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 ஃபாரன்ஹூட்டை தாண்டி கொளுத்தியது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24 ஆம்தேதிகளில் 104 ஃபாரன்ஹூட் பதிவானது. கத்திரி ​வெயில் முடிந்தாலும், மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00