தேனி மாவட்டம் சின்னஒவுலாபுரம் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் : துணை தலைவர் பதவியை அமமுக கைப்பற்றியது
May 28 2022 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் சின்னஒவுலாபுரம் ஊராட்சியில் சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் அமமுகவில் இணைந்த நிலையில் துணை தலைவர் பதவியை அமமுக கைப்பற்றியுள்ளது.
சின்னமனூர் அருகே உள்ள 10 வார்டுகள் உள்ள சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக நாகம்மாள் மற்றும் துணைத் தலைவராக வேல்முருகன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். துணைத் தலைவர் வேல்முருகன் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் துணை தலைவருக்கான பதவி காலியாக இருந்தது. இதனிடையே, சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மன்மதன், குமார், அர்ச்சனா சிவமுருகன், செல்லம்மாள், இலக்கியா செல்வம், 9வது வார்டு உறுப்பினர் ராதா ஆகியோர் அ.ம.மு.க தேனி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. முத்துசாமி தலைமையில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் பா. நீதி முன்னிலையில் இணைந்தனர். இந்நிலையில், துணை தலைவர் பதவிக்காக நடைபெற்ற மறைமுக தேர்தலில் திரு. மன்மதன் அதிக வாக்கு பெற்று சின்ன ஓவுலாபுரம் ஊராட்சித் துணைத்தலைவரானார். இதனையடுத்து துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மதனுக்கு அமமுகவினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில் சின்னமனூர் நகரச் செயலாளார் திரு. சுரேஷ், உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பிரகாஷ், சின்ன ஓவுலாபுரம் கிளைச் செயலாளர் திரு. கண்ணன் உள்ளிட்ட ஒன்றிய, பேரூர், ஊராட்சி மன்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.