கும்பகோணத்தில் ஸ்ரீனிவாச பெருமாள், திருச்சேறை சாரநாதப் பெருமாள் திருக்கோயில்களில் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு : பொதுமக்கள் சின்னம்மாவை வரவேற்று புகைப்படம் எடுத்தனர்
May 28 2022 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மற்றும் திருச்சேறை பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், அருள்மிகு சாரநாதப் பெருமாள் கோயிலில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வழிபாடு நடத்தினார்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். சின்னம்மாவுக்கு திருக்கோவில் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாயார் வஞ்சுளவல்லி, ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் கல்கருட பகவானை சின்னம்மா வழிபட்டார்.
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் சின்னம்மாவை அன்புடன் வரவேற்று, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, திருச்சேறை பகுதியில் சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில் சின்னம்மா வழிபாடு நடத்தினார். ஸ்ரீகாவேரி தாயாரையும், சாரநாயகி தாயாரையும், சாமி தரிசனம் செய்தார். கோயிலில் வழிபாடு நடத்திய சின்னம்மாவை, பொதுமக்கள் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.