உதகை அருகே புலியை கூட்டமாக துரத்திய செந்நாய்கள் : புலி, செந்நாய்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
Jun 23 2022 8:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி ஒன்றை செந்நாய்கள் கூட்டமாக துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் உதகை அருகே உள்ள மார்லிமந்து என்னும் ஏரிக்கு அருகே புலி ஒன்றை செந்நாய்கள் துரத்தின. கூட்டமாக வந்த செந்நாய்களை கண்ட புலி, அருகிலுள்ள புதரில் சென்று மறைந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு, புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலி மற்றும் செந்நாய்கள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.