பொதுக்குழு விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் ஆபத்து - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து
Jun 23 2022 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சி பிளவுப்பட்டதாக உணரப்படுகிறது என மூத்த பத்திரிகையாளர் தராசு திரு.ஷியாம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினரிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதால், கொண்டுவந்த தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் தராசு திரு.ஷியாம், பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சி பிளவுப்பட்டதாக உணரப்படுகிறது தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலையும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.