கும்பகோணம் அருகே திருமண அழைப்பிதழில் ஊர் மக்களின் பெயர்களும் அச்சடிப்பு : ஊராட்சி மன்ற தலைவரின் செயலால் ஊர் மக்கள் நெகிழ்ச்சி
Jun 23 2022 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகேயுள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவர், தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழில், ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் அச்சிட்டு, அழைப்பு விடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர், நாளை நடைபெறவுள்ள தனது மகளின் திருமணத்திற்காக, தனது ஊராட்சிக்குட்பட்ட 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து, திருமணத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். திருமண அழைப்பிதழில், மல்லபுரம் ஊராட்சியை சேர்ந்த 900 குடும்பத்தினரின் பெயர்களை, தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் பெயர்களுடன் சேர்த்து அச்சடித்துள்ளார். ஊர் மக்கள் அனைவரின் பெயரையும், திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷின் இந்த செயலை, ஊர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.