நெல்லை: வள்ளியூரில் பேருந்து நிலைய கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - ஆர்பாட்டம்
Jun 23 2022 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பேருந்து நிலைய கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூரில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல கிராமங்களை இணைக்கும் பேருந்து நிலையமாகவும் திருநெல்வேலி நாகர்கோயில் இணைக்கும் சாலையாகவும் இந்த பேருந்து நிலையம் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதை ஒட்டி, பேருந்து நிலைய வியாபாரிகள் காலி செய்யும்படி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு கொடுத்துள்ளனர். இதனையடுத்து பேருந்து நிலைய வியாபாரிகள் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு கண்டனம் தெரிவித்து பேருந்து நிலைய கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.