திருப்பூரில் ப்ளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர் - சக மாணவர்கள் வியப்பு
Jun 23 2022 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் இரட்டைப் பிறவியர், பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் - அக்நெல் தம்பதியினர். இவர்களுக்கு ரோகித்ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் இவர்களின் இரட்டை மகன்களும் ஒரே மாதிரியாக 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் பிறப்பில் மட்டுமின்றி மதிப்பெண் எடுப்பதிலும் இரட்டையர் என்பதை மெய்பிக்கும் வகையில் நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.