செங்கல்பட்டு: 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
Jun 23 2022 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை தாம்பரம் காவல் ஆணையரகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருக்கு 8 வயதில் மகன் உள்ளார். தன்னை காதலித்து திருமணம் செய்த கணவர் மணிவண்ணன், தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் செல்வி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது மகன் மற்றும் சகோதரி சத்யாவுடன் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு வந்த செல்வி, அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.