மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
Jun 23 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில், ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாண்டிபஜார் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட 200க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போலீசாரின் தடுப்புகளை தாண்டி, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பை மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.