இ.பி.எஸ். தரப்பால் அவைத் தலைவராக அறிவிக்கப்பட்டார் தமிழ்மகன் உசேன்
Jun 23 2022 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், திரு. தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் தெரிவித்தனர்.
சென்னை வானகரத்தில், தொடர் கூச்சல் - குழப்பங்களுக்கு இடையே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், இரு கோஷ்டிகளாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் அமர்ந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில், திரு. தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி. சண்முகமும், கே.பி. முனுசாமியும் அறிவித்தனர்.