கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது ஓ.பி.எஸ். மீது தண்ணீர் பாட்டில் வீசித் தாக்குதல் - ஈ.பி.எஸ். கோஷ்டியினரின் செயலால் பொதுக்குழுவில் பரபரப்பு
Jun 23 2022 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சரமாரியாக தண்ணீர் பாட்டில்களை வீசி, அவரது வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வெளியேறினர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடத்த சமிக்ஞைகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசினர். மேலும், அவரை சூழ்ந்து அவரது முதுகில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. வைத்திலிங்கம் மீதும் தாக்குதல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம் வந்த வாகனத்தின் டயரை பஞ்சராக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர், தனது வாகனத்தின் டயரை மாற்றி பயணித்தார் என கூறப்படுகிறது.