அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல் - எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் சுவரொட்டி
Jul 1 2022 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.-க்கு இடையே அதிகாரப் பதவிச்சண்டை நீடித்து வரும் நிலையில், நிலையில், அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவில் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், தலைமைக் கழகத்தை சூறையாடி, இடைத்தேர்தலில் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் செய்த எடப்பாடி பழனிசாமி கண்டனம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம், வளர்மதி, உதயகுமார், எஸ்.பி வேலுமணி போன்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.