பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமை ஏற்போம் : அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரால் கோவையில் பரபரப்பு
Jul 1 2022 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்னம்மாவின் தலைமை ஏற்போம் என்ற வாசகங்களுடன் கூடிய அதிமுக தொண்டர்கள் கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
அதிமுகவில் தற்போது நிலவிவரும் அதிகார சண்டையின் காரணமாக பிளவு பட்டு வருவதை கண்டு பொறுக்காத அதிமுக தொண்டர்கள், கழகப் பொதுச் செயலாளராக புரட்சித்தாய் சின்னம்மா வரவேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள், ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்திக்கும் புரட்சிப் பயணம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில், வீரமும் விவேகமும் எங்கள் அடையாளமே; உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ, அதன் உரிமைக்கு உரியவர் நாம் அல்லவோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமை ஏற்போம்; அதிமுக தொண்டர்கள் கோவை மாவட்டம் என அச்சிடப்பட்ட போஸ்டர்கள், கோவையை சுற்றிலும் ஒட்டப்பட்டு வருகின்றன. கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி வரும் இந்த போஸ்டர்களை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.