அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவுடன் சென்னை, திருவள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு
Jul 1 2022 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை, திருவள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில், திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு. சதீஷ், சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புரட்சித்தாய் சின்னம்மாவை, தலித் மக்கள் இளைஞர் பேரவை நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு. சிவ. விஸ்வநாதன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சின்னம்மாவை, மக்களமைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ஞானவேல் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. குடந்தை ரமேஷ், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சின்னம்மாவை, திருவிடை மருதூர் ஒன்றியம் செம்மங்குடி அ.இ.அ.தி.மு.க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு. மோகன்தாஸ், சந்தித்து வாழ்த்து பெற்றார்.