நண்பனை கத்தியால் குத்திக்கொண்ற கார் ஓட்டுநர் போலீசாரால் கைது : ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் நேர்ந்த விபரீத சம்பவம்
Jul 1 2022 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே பெண்ணை இருவர் காதலித்த விவகாரத்தில், நண்பனை கத்தியால் குத்திக்கொண்ற கார் ஓட்டுநரை போலீசாரால் கைது செய்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி சேர்ந்த சக்திகுமார் என்பவர், வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி, விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காந்திநகர், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநராக முத்துப்பாண்டி என்பவருடன் தொழில் ரீதியாக சக்திகுமார் பழகி வந்தார். ஒரே பெண்ணை இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில், முத்துப்பாண்டி, சக்திகுமாரை அவரது வீட்டு வாசலில் வைத்து நள்ளிரவில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சக்திகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலிசார், வழக்கு பதிவுசெய்து முத்துபாண்டியை கைதுசெய்தனர்