திருவண்ணாமலை: தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மோதல்
Jul 1 2022 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் தனியார் நடத்தும்
ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் முன்விரோதம் காரணமாக வணிகவியல் துறை மாணவர்களுக்கும் வேதியியல் துறை மாணவர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
ஒருவருக்கொருவர் முரட்டு தனமாக தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி ஆசிரியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.