திருவண்ணாமலை: பள்ளிக்‍கட்டிடம் கட்டித்தராததால் கோவில் மண்டபத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்

Jul 1 2022 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் பள்ளிக்‍கட்டிடம் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் கோவில் மண்டபத்தில் அமர்ந்து கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலைப் பள்ளியாக இருந்த இந்த அரசு பள்ளி கடந்த 2008ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 14 ஆசிரியர்கள் மற்றும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 334 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரசினர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லாததால் அங்குள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் மாணவ மாணவிகளை அமர்த்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளியின் சார்பில் சுமார் ஆறு முறை புதிய பள்ளி கட்டிடம் வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தற்போது வரை மாவட்ட நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படு​கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00