தூத்துக்‍குடி தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்‍கு ஆளான மகளிர் குழு பெண் விஷம் குடித்து தற்கொலை

Jul 1 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்‍கு ஆளான மகளிர் குழு பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துமாரி அந்தப் பகுதியை சேர்ந்த மகளிர் குழு பெண்களுக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த மகளிர் குழு பெண்கள் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதை அடுத்து தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் மகளிர்க்கு கடன் வாங்கி கொடுத்த முத்து மாரியை நெருக்கடிக்கு உள்ளாக்கியதுடன் அவரை மிரட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துமாரி கடந்த 26-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முத்து மாரியன் மறைவுக்கு பின்பும் முத்துமாரியின் கணவர் கருப்பசாமி மற்றும் குடும்பதினரிடம் கடன் தொகையை கேட்டு தனியார் நிதி நிறுவனம் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முத்துமாரியின் குடும்பதினர் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00