ஈரோடு ஆர்கேவி சாலையில் சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கியதால் குடிநீர் குழாய் உடைப்பு
Jul 1 2022 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு ஆர்கேவி சாலையில் சரக்கு வாகனம் குழியில் சிக்கியதால் குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணானது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை மற்றும் ஊராட்சிகோட்டை குடிநீர்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் ஆர்கேவி சாலையில் சரக்கு வாகனம் ஒன்று ஊராட்சி கோட்டை குடிநீர் பணிகளுக்காக தோண்டபட்ட குழியில் சிக்கியது. இதனால் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிக அளவில் குடிநீர் சாலையில் பாய்ந்தோடி வீணான நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் சரக்கு வாகனத்தை மீட்டு சாலையினை சீரமைத்தனர்.