கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கடன் தொல்லையால் இளம் தம்பதியினர் தற்கொலை
Jul 1 2022 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கடன் தொல்லையால் இளம் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு முளங்குழி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் - சந்தியா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் சந்தியா, தட்டான்விளையை சேர்ந்த ஆன்றோ பிரப்ளின் என்பவரிடம் சிறிது சிறிதாக 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இதனிடையே ஆன்றோ பிரப்ளின், சந்தியாவின் வீட்டிற்குச் சென்று கடனை திருப்பிக் கேட்டுள்ளார். இதையறிந்த ஜான்சன், சந்தியாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தியா தூக்கிட்டும், அவரது கணவர் ஜான்சன் விஷமருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர், இருவரது உடலையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.