காஞ்சிபுரம்: அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பெற்றோர் வேதனை
Jul 1 2022 6:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மழலை குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, மேற்கூறியின் கம்பிகள் பெயர்ந்த நிலையில் காட்சி அளித்து வருகிறது. அதனை சீரமைக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.