சென்னையில் முகக்‍கவசம் அணியாத நபர்களுக்‍கு ரூ.500 அபராதம் - நாளைமுதல் அபராதம் விதிக்‍கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Jul 5 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் மக்‍கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்‍கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்‍கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தைக்‍ கடந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில், மார்க்‍கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்‍கள் அதிகம் கூடும் இடங்களில், முகக்‍கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்‍கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அந்தந்த வார்டுக்‍கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்‍கப்பட்டுள்ளதாகவும், இந்தக்‍குழுக்‍களின் ஆய்வின்போது முகக்‍கவசம் அணியாத நபர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00