கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா - 5 ஆயிரம் கிலோ மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் உற்சாகம்
Jul 6 2022 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், 5 ஆயிரம் கிலோ மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன்களை வளர்த்து விற்பனை செய்ய பொதுப்பணித் துறை மூலம் தனி நபர்களுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அணையில் உள்ள மீன்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மீன்பிடி திருவிழா நடைப்பெற்றது. இதில், வாணியந்தல், சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, தண்டலை, சோமண்டார்குடி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அணைக்குள் இறங்கி போட்டி, போட்டு கொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர்.
அப்போது விரால், ஜிலேபி, ரோகு, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை அள்ளி சென்றனர்.