கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வருகிற 9 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
Aug 5 2022 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 9-ம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.