கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை : மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு குற்றச்சாட்டு
Aug 5 2022 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காக தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றி தங்கள் உயிரை நீத்த மருத்துவர்களுக்கு அரசு அறிவித்தபடி தற்போது வரை எந்த ஒரு இழப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரசு அளித்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டனர்.