தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : 5 கி.மீ. தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
Aug 5 2022 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக - ஆந்திர வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர வனப்பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பாலாற்றை ஒட்டியுள்ள நீர்நிலை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.