புதுச்சேரியில் அ.ம.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை
Aug 5 2022 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான திரு. யூசி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அதிக அளவில் இளைஞர்களை கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வரும் 15ஆம் தேதி கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பெருந்திரளான நிர்வாகிகளுடன் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் துணை செயலாளர் திரு. முருகன், திரு. சிலம்பரசன், பொருளாளர் திரு. வீரப்பன், இணை செயலாளர் திரு. தரணிதேவி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. சீதாராமன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.