நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய பில்லூர் அணை : பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

Aug 5 2022 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியாக உபரியாக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. பில்லூர் அணையின் முக்கிய நீர் பிடிப்பான குந்தா மற்றும் கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பில்லூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பில்லூர் அணைக்கான நீர் வரத்து 15ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100அடியில் தற்போதைய நீர் மட்டம் 97அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00