குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா தொடங்கியது - பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு
Aug 5 2022 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாதால் இரண்டு ஆண்டுகளாக சாரல் திருவிழா நடைபெறவில்லை. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சாரல் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள சாரல் திருவிழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடைபெற உள்ளது.
குற்றால அருவிகளில் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 5 வதுநாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாரல்விழாவும் தொடங்கியுள்ளது.