கொரியர் மூலமாக போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
Aug 5 2022 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரியர் மூலமாக போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
மதுரையைச் சேர்ந்த முருகேசன், மணிகண்டன், மேனன் என்ற விஜி ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கொரியர் மூலமாக 620 கிராம் போதை பொருளை கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது- மனுதாரர்கள் தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என கூறினாலும் அவர்களது விளக்கங்கள் ஏற்கத்தக்க வகையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதி அவர்களின் ஜமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை 5 மாதங்களுக்குள்ளாக கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அப்படி வழக்கு முடியவில்லை என்றால் மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டு வாழ்க்கை முடித்து வைத்தார்.