கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு : இரு கரைகளிலும் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
Aug 6 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளைமணல் கிராமத்தில் 120 வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து தீவு கிராமமாக மாறி உள்ளது. இதே போல் முதலைமேடுதிட்டு, நாதல படுகை உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.