வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Aug 6 2022 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 754 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.