நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை - மைசூர் நெடுஞ்சாலையில் மண்சரிவு

Aug 6 2022 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் மலைப்பாதையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்‍கப்பட்டது. இரண்டு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சுமார் 48 மணி நேரமாக இடைவிடாமல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 60க்‍கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரங்களை அப்புறப்படுத்தி, சாலைகளை சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில், உதகையிலிருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் மலைப்பாதையில் ஆகாச பாலம் அருகே சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து சாலையை சரி செய்து மூன்று மாநில போக்குவரத்தை துவக்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00