நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு - அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில் 32 சென்டிமீட்டர் மழை பதிவு

Aug 6 2022 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை அருகே பாலாடா பகுதியில் நூற்றுகணக்கான ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தால் விவசாயிகள் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து முடங்கி இயல்பு வாழ்க்‍கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 32 சென்டி மீட்டர் மழையும், அப்பர் பவானி பகுதியில் 20 சென்டி மீட்டர் மழையும், பந்தலூர் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக உதகை அருகே பாலாடா பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, பூண்டு போன்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தண்டர்வோல்ட் பொழுது போக்கு பூங்காவிற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00