ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசுக்கு விவசாயிகள் கண்டனம் - சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் சங்கங் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
Aug 6 2022 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் சுதந்திர தினத்தன்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் தமிழக காவிரி விவசாய சங்கங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்திற்கு புறம்பாக தற்போது புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் ஆளும் தி.மு.க. அரசு அனுமதி கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதாக குற்றம்சாட்டினார். எனவே தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மன்னார்குடியில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரையிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.