நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றம் : ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவின் தாயார் வீடு, ரேஷன் கடை உள்ளிட்டவை அகற்றம்
Aug 6 2022 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழுதாவூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வாவின் தாயார் வீடு, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம இ-சேவை மைய கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.