கும்பகோணத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வாகனத்தால் ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் : மக்களிடையே அதிருப்தி
Aug 6 2022 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் வாகனத்தால் ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து டெல்டா பகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்ற நிலையில், அமைச்சசரின் வாகனம், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றுப் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தது. அமைச்சரின் வாகனம் சென்ற பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.