மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட்ட விசைப்படகு மணலில் சிக்கியது : துறைமுக முகப்பில் உள்ள கட்டுமானத்தை சீரமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை
Aug 6 2022 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்ட விசைப்படகு துறைமுகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மணலில் சிக்கி தடுமாறியதால் மீனவர்கள் வேதனை அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்தில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் நுழைவாயில் கட்டமைப்புகள் முறையாக இல்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துறைமுகத்திற்குள் நுழையும்போது விசைப்படகுகளை கடல் அலைகள் தூக்கி வீசுவதும் மணலில் சிக்கி கவிழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. விபத்துகளில் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தனர். ஆனால் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெளியேறிய விசைப்படகு, முகப்பு பகுதி மணலில் சிக்கி நிலை குலைந்து நின்றது. இதனால் மற்ற மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. அரசு, மீன் பிடி துறைமுகத்தின் முகப்பில் உள்ள கட்டுமான பணிகளை சீரமைத்து தந்தால் தான் இயல்பாக மீன்பிடிக்க செல்ல முடியும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.