உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : மும்முறை தாண்டுதலில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு
Aug 6 2022 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர் திரு. செல்வ பிரபு திருமாறனுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மும்முறைத் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் திரு. செல்வபிரபு திருமாறனை மனமார பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் திரு. செல்வபிரபு, தடகளத்தில் உலக அளவில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துவதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.