ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளன : வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல்

Aug 6 2022 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்ட நிலையில், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து ஆலையை மூட மே- 28ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு சரிதான் என 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்ற அனுமதி கிடைக்காததை தொடர்ந்து அதனை விற்பனை செய்யப்போவதாக கடந்த ஜூன் மாதம் அனில் அகர்வால் அறிவித்திருந்தார். தற்போது அதனை வாங்க 7 நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00