கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைமுதல் 4 நாட்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும் - தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 6 2022 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, குமரிக்கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் வருகிற 10-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.